Thursday, December 15, 2022

 

தமிழ் ஏன் உலகச் செம்மொழி? ஜார்ஜ் எல்.ஹார்ட் என்ன சொல்கிறார்?

11.4.2000 அன்று ஹார்ட் தாம் எழுதிய அந்த அறிக்கையில் தமிழ் ஏன் செம்மொழி என்பதற்கான காரணங்களை இப்படி அடுக்குகிறார்:

"முதலாவதாக, தமிழ் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க பழமை உடையது. நவீன இந்திய மொழிகளின் இலக்கியங்களைவிட தமிழ் (இலக்கியம்) ஆயிரம் ஆண்டுகள் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. பழைய தமிழ் கல்வெட்டுகளைக் கொண்டு ஆராயும்போது, தமிழின் பழமையான நூலான தொல்காப்பியத்தின் பகுதிகள் கி.மு. 200-ம் ஆண்டினைச் சேர்ந்தவை என்பது தெரியவரும். தமிழின் மிகச் சிறந்த படைப்புகளான சங்கப் பாடல் தொகுப்புகள், பத்துப்பாட்டு போன்றவை கி.பி. முதல், இரண்டாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை. இவைதான் இந்தியாவில் எழுதப்பட்ட மிகத் தொன்மையான மதச்சார்பற்ற கவிதைகள். காளிதாசரின் படைப்புகளைவிட இவை 200 ஆண்டுகள் மூத்தவை".

"இரண்டாவதாக, இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, ஆனால் சம்ஸ்கிருத்ததில் இருந்து தருவிக்கப்படாத ஒரே இலக்கிய மரபு தமிழினுடையதுதான். சம்ஸ்கிருதத்தின் செல்வாக்கு தெற்கில் வலிமையாக மாறும் முன்பே தமிழிலக்கியங்கள் எழுந்துவிட்டன. எனவே சம்ஸ்கிருதம் உள்ளிட்ட பிற இந்திய மொழிகளின் உள்ளடக்கத்தில் இருந்து பண்பில் வேறுபட்ட இலக்கியங்கள் இவை. இந்த தமிழ் இலக்கியங்களுக்கு சொந்தமாக கவிதைக் (செய்யுள்) கோட்பாடுகள், சொந்தமாக இலக்கண மரபு, சொந்தமாக அழகியல், எல்லாவற்றுக்கும் மேலாக மிகவும் தனித்துவமான மிகப்பெரிய இலக்கியத் தொகுப்பு உண்டு. சம்ஸ்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளில் இருப்பவற்றில் இருந்து முற்றிலும் வேறுபட்ட இந்திய உணர்வியலைக் காட்டுகிறவையாக இவை இருக்கின்றன. தமக்கென சொந்தமாக மிக வளமையான, பரந்த அறிவு மரபை இவை கொண்டிருக்கின்றன".

செவ்வியல் நூல்கள்:-

1. தொல்காப்பியம்


எட்டுத்தொகை நூல்கள்:-

2. நற்றிணை

3. குறுந்தொகை

4. ஐங்குறுநூறு

5. பதிற்றுப்பத்து

6. பரிபாடல்

7. கலித்தொகை

8. அகநானூறு

9. புறநானூறு


பத்துப்பாட்டு:-

10. திருமுருகாற்றுப்படை

11. பொருநராற்றுப்படை

12. சிறுபாணாற்றுப்படை

13. பெரும்பாணாற்றுப்படை

14. முல்லைப்பாட்டு

15. மதுரைக்காஞ்சி

16. நெடுநல்வாடை

17. குறிஞ்சிப்பாட்டு

18. பட்டினப்பாலை

19. மலைபடுகடாம்


பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்:-

20. நாலடியார்

21. நான்மணிக்கடிகை

22. இன்னாநாற்பது

23. இனியவைநாற்பது

24. கார்நாற்பது

25. களவழிநாற்பது

26. ஐந்திணை ஐம்பது

27. திணைமொழி ஐம்பது

28. ஐந்திணை எழுபது

29. திணைமாலை நூற்றைம்பது

30. பழமொழி

31. சிறுபஞ்சமூலம்

32. திருக்குறள்

33. திரிகடுகம்

34. ஆசாரக்கோவை

35. முதுமொழிக்காஞ்சி

36. ஏலாதி

37. கைந்நிலை


காப்பியங்கள்:-

38. சிலப்பதிகாரம்

39. மணிமேகலை

40. முத்தொள்ளாயிரம்

41. இறையனார் களவியல் உரை.