வள்ளலார் பேருபதேசம்
ஆதலால், இவ்வுலகத்தில் விசாரமென்கின்ற உண்மை தெரியாது, விசாரமென்று வழங்கி, அதை துக்கமென்றே சொல்லுவார்கள்.நாம் அப்படி அர்த்தம் பண்ணக்கூடாது. அவர்கள் பண்ணுகின்றது - துக்கமே விசாரமேன்கின்றது அது தப்பு ; அவ்வர்த்தமுமன்று. சார மேன்கிறது துக்கம். விசாரமேன்கிறது துக்க நிவர்த்தி. வி உபசர்க்கம். சாரமென்கின்றது துக்கத்தை நிவர்த்தித்து வி. ஆதலால், விசாரமேன்கின்றது முன் சொன்னபடி பரலோக விசாரத்தையே குறிகின்றது. ஆதலால் இடைவிடாது நாம் விசார வசந்தராயிருக்க வேண்டியது. மேலும் வி-சார மென்பது ; வி-விபத்து ; சாரம் நீங்குதல் , நடத்தல் , ஆதலால் இடைவிடாது நன்முயர்சியின்கன்பயிலுதல் வேண்டும் . மேலும், சிலர் "இது ஆண்டவர் வருங்கின்ற தருணமாக இருகின்றதே ! இத்தருணத்தில் முயற்சி செய்வானேன்? ஆண்டவர் வந்தவுடனே பெற வேண்டியதை நாம் பெற்றுகொள்ளப்படாதோ ? " என்று வினவலாம் . ஆம் இஃது - தாம் வினவியது நலம்தான் . நம்மவர்களின் திரை நீங்க போகின்றதென்றும் சத்தியந்தான். நீங்களேல்லாவரும் பெற வேண்டியதைப் பெற்றுகொள்ளுகின்றதுஞ்ச சத்தியந்தான். ஆனால் முன் சொன்ன ராக சம்பந்தமான பச்சைத்திரை இரண்டு கூறாக இருக்கின்றது....