வள்ளலாரின் பேருபதேசம்

பச்சைத்திரை நீங்கினால், மற்றத் திரைகள் அதிக விரைவில் நீங்கி போய்விடும். அந்த பசுமை வர்ணம் எப்படிப்பட்டதென்றால், கருமைக்கு முதல் வர்ணமான பசுமையாக இருக்கின்றது. இப்படிப்பட்ட அழுத்தமான திரை நீங்க வேண்டுமென ஷ்தொதரித்தும், தெய்வத்தை நினைத்தும், நமது குறையை ஊன்றியும் - இவ்வாண்ணமாக, இருக்கின்ற போதும் படுக்கின்றபோதும் இடைவிடாது இவ்விசாரதொடு ஆண்டவர் நமக்குண்மை தெரிவிக்க வேண்டுமென்கின்ற முயற்சியுடனிருந்தால், தெரிய வேண்டியதைத் தெரிந்து கொள்ளலாம்

அவ்விசாரம் பரம் அபரம் என்று இரண்டு வகையாயிருகின்றது. இவற்றி பரம் பரலோக விசாரம், அபரம் இகலோக விசாரம் இவ்விரண்டில் இகலோக விசாரம் விசாரமல்ல. சாதரணமாக ஒருவன் விசாரம் செய்து கொண்டிருக்கின்றனே யென்றால், அவ்விசாரம் விசாரமாகாது, உண்மை விசாரமு மல்ல, ஏனெனில், விசாரமேன்கின்றதர்க்கு பொருள்: வி - சாரம் என்பதில் விசாதாரண உலக விசாரத்தை மறுக்க வந்தது; அது மேலும் பரலோக விசாரத்தையே குறிக்கும் பொருட்டு வந்தது. ஜலத்தி லிருக்கின்ற பாசியை நீக்குவது போல், நமது ஆன்மாவைத் தெரியவொட்டாமல் மூடியிருகின்ற பச்சைத் திரையாகிய ராகதிகளை விசார அதியுஷ்ணத்தா லல்லது, மற்ற உஷ்ணங்களால் நீக்கமுடியாது. அந்த உஷ்ணம் யோகியினுடைய அனுபவத்தில் தெரியும். அதை மனுஷ்ய தரத்தில் உண்டு பண்ணுவதற்குத் தெரியாது. அந்த விசாரத்தைவிட ஆண்டவரை ஸ்தொதிர்ரம் செய்கின்றதிலும் தெய்வத்தை நினைக்கின்றதிலும் அதிக உஷ்ணம் உண்டாகும். யோகிகள் வனம், மலை, முழை முதலியவற்றிக்கு போய், நூறு ஆயிரம் முதலிய வருஷக்காலம் தவஞ்செய்து, இவுஷ்ணத்தை உண்டு பண்ணி கொள்ளுகிறார்கள். இப்படித் தவம் செய்து உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகின்றதைப் பார்க்கிலும், தெய்வத்தை ஷ்தொதரிம் செய்கின்றதிலும் நினைகின்றதிலும் - இதை விடக் - கோடி பங்கு, பத்துகோடிப் பங்கு அதிகமாக உஷ்ணம் உண்டு பண்ணிகொள்ளலாம். எவ்வாறெனில்: ஒரு ஜமா நேரம், மனதில் இக விசார மின்றிப் பர விசாரிப்புடன் ஆன்ம நெகிழ்ச்சியோடு தெய்வத்தை சிந்தித்து கொண்டாவது திருந்தால், நாம் பெற வேண்டியதை பெற்று கொள்ளலாம் .

Comments

Popular posts from this blog

APR-MAY 2026 OBT356-LIFESTYLE DISEASES AU QP

APRIL/MAY 2026. ME3491-THEORY OF MACHINES AU QP

வள்ளலார் ஆன்மிக சிந்தனைகள்