வள்ளலாரின் ஆறாம் திருமுறையில்ருந்து

அகரநிலை விளங்குசத்தார் அனைவர்க்கும் அவர்பால்

அமர்ந்தசத்தி மாரவர்கள் அனைவருக்கும் அவரால்

பகரவரும் அண்டவகை அனைத்தினுக்கும் பிண்டப்

பகுதிகள்அங் கனைத்தினுக்கும் பதங்கள்அனைத் தினுக்கும்

இகரமுறும் உயிர்எவைக்கும் கருவிகள்அங் கெவைக்கும்

எப்பொருட்க்கும் அனுபவங்கள் எவைக்கும்முத்தி எவைக்கும்

சிகரமுதல் சித்திவகை எவைக்கும்ஒளி வழங்கும்

திருச்சிற்றம் பலந்தினிலே தெய்வம்ஒன்றே கண்டீர்.

Comments

Popular posts from this blog

swami viveganandar sinthanaigal-3

LSD -NOV-DEC 2025 AU QP ANS

APR-MAY 2026 OBT356-LIFESTYLE DISEASES AU QP