வள்ளலார் பேருபதேசம்

ஆதலால், இவ்வுலகத்தில் விசாரமென்கின்ற உண்மை தெரியாது, விசாரமென்று வழங்கி, அதை துக்கமென்றே சொல்லுவார்கள்.நாம் அப்படி அர்த்தம் பண்ணக்கூடாது. அவர்கள் பண்ணுகின்றது - துக்கமே விசாரமேன்கின்றது அது தப்பு ; அவ்வர்த்தமுமன்று. சார மேன்கிறது துக்கம். விசாரமேன்கிறது துக்க நிவர்த்தி. வி உபசர்க்கம். சாரமென்கின்றது துக்கத்தை நிவர்த்தித்து வி. ஆதலால், விசாரமேன்கின்றது முன் சொன்னபடி பரலோக விசாரத்தையே குறிகின்றது. ஆதலால் இடைவிடாது நாம் விசார வசந்தராயிருக்க வேண்டியது. மேலும் வி-சார மென்பது ; வி-விபத்து ; சாரம் நீங்குதல் , நடத்தல் , ஆதலால் இடைவிடாது நன்முயர்சியின்கன்பயிலுதல் வேண்டும் .

மேலும், சிலர் "இது ஆண்டவர் வருங்கின்ற தருணமாக இருகின்றதே ! இத்தருணத்தில் முயற்சி செய்வானேன்? ஆண்டவர் வந்தவுடனே பெற வேண்டியதை நாம் பெற்றுகொள்ளப்படாதோ ? " என்று வினவலாம் . ஆம் இஃது - தாம் வினவியது நலம்தான் . நம்மவர்களின் திரை நீங்க போகின்றதென்றும் சத்தியந்தான். நீங்களேல்லாவரும் பெற வேண்டியதைப் பெற்றுகொள்ளுகின்றதுஞ்ச சத்தியந்தான். ஆனால் முன் சொன்ன ராக சம்பந்தமான பச்சைத்திரை இரண்டு கூறாக இருக்கின்றது. யாவெனில்; அசுத்தமாயாதிரை, சுத்தமாயாதிரைஎன்னும் இரண்டுமாம். இவை கீழ்பாகதிலோருகூரும் மேற்பாகதிலோருகூருமாக இருக்கும். கீழ்பாகத்திளுள்ளது அசுத்தமாயாதிரை இகலோக போக லஷிய முடையது. சுத்தமாயாதிரை பரலோக சாத்தியத்தையுடையது. இவற்றில் ஆண்டவர் வந்து அனுகிரகஞ்ச செய்கின்றபோது, முயற்சியில்லாத சாதாரண மனுஷ்யர்களுடைய கீழ்பாகத்திலுருகின்ற அசுத்தமாயை என்னும் பசைதிரையை மாத்திரம் நீக்குவார், ஆதலால், அக்காலத்தில் நாம் அத்திரை நீங்கியவுடன் கூடியவரையில் சுத்தமாக புனிதர்களாக இருக்கலாமே யல்லது, பெற வேண்டியதை பெற்று கொள்ளுகிரதற்குக் கூடாது . மேலும் பஞ்சகிருத்திய விபவங்களும் . இதர சித்தி முதலியவைகளும், ஆன்மானுபவத்தையும் செய்யவும் பெறவும் கூடாது. பின்னும் நன்முயற்சி செய்தே மேலேற வேண்டும்.

Comments

Popular posts from this blog

APR-MAY 2026 OBT356-LIFESTYLE DISEASES AU QP

APRIL/MAY 2026. ME3491-THEORY OF MACHINES AU QP

வள்ளலார் ஆன்மிக சிந்தனைகள்